ஆப்நகரம்

இவரு நல்லவரா? கெட்டவரா? காஷ்மீர் தீவிரவாதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்...!

தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

TNN 3 Jul 2017, 3:51 pm
காஷ்மீர்: தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil kashmir militant funeral made stuns
இவரு நல்லவரா? கெட்டவரா? காஷ்மீர் தீவிரவாதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்...!


காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பிரெண்டிபத் போராவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை மற்றும் ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு ஒரு வீட்டிற்குள் பொதுமக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய அதிரடிப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் இரண்டு தீவிரவாதிகளும் பலியாகினர். அவர்களில் ஒருவன் பசிர் லஸ்காரி.

இவன் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சோயப்சாலி கிராமத்தைச் சேர்ந்தவன். லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்தவன். இதையடுத்து அவனது இறுதிச் சடங்கில் சொந்த ஊரில் நடைபெற்றது. அதில் பல்வேறு கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுடன் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிகளுடன் கலந்து கொண்டனர். இதேபோல் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Kashmir militant funeral made stuns State Govt.

அடுத்த செய்தி