ஆப்நகரம்

காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் எல்லையில் இருந்து, காஷ்மீருக்குள் ஊடுருவிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

TNN 27 May 2017, 5:17 am
பாகிஸ்தான் எல்லையில் இருந்து, காஷ்மீருக்குள் ஊடுருவிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Samayam Tamil kashmir two killed on loc army suspects they were pakistan border team
காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை


சமீபகாலமாக, பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அத்துடன், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்திய எல்லைக்குள் வந்து, பாதுகாப்பு வீரர்களை கொன்றுவிட்டு செல்வதும் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்றிரவு காஷ்மீரில் உள்ள ஊரி பகுதிக்குள், பாகிஸ்தான் எல்லையில் இருந்து சிலர் ஊடுருவியதை இந்திய வீரர்கள் கவனித்தனர். உடனடியாக, அவர்களை நோக்கி வீரர்கள் எச்சரிக்கை தர, பதிலுக்கு அந்த நபர்கள் ஏகே 47 துப்பாக்கிகளால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். சில மணிநேரம் நீடித்த இந்த சண்டையின் முடிவில், 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் சிலர் தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்றும், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும், இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

THE ARMY said that it has killed two intruders on the Line of Control (LoC) in Kashmir on Friday morning.

அடுத்த செய்தி