ஆப்நகரம்

கேசிஆர் மக்களாட்சி நடத்தவில்லை; மன்னராட்சி நடத்துகிறார்; குஷ்பு சரமாரி விமர்சனம்!

ஐதராபாத்: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்கானா முதல்வரை குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2018, 5:45 pm
தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பிரச்சார நபராக குஷ்பு அறிவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Khushbu.


இதையடுத்து அவர் தெலுங்கானாவில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ராவ் அளித்த வாக்குறுதிகள் குப்பையில் போடப்பட்டுள்ளன. அவருடைய ஆட்சியில் பயனடைந்த ஒரே பெண், அவரது மகள் கவிதா மட்டுமே.

ராவின் நிர்வாகத்தில் பயனடைந்தவர்கள் அவரது குடும்பத்தினர் மட்டுமே. முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ள சந்திரசேகர ராவ், மன்னர் போன்று நடந்து கொள்கிறார். முதலமைச்சர் போன்று நடந்து கொள்ளவில்லை.

கமிஷன் மனிதராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். தலித் முதலமைச்சர் என்ற வாக்குறுதியை மறந்து விட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச கடன் உதவி செய்யப்படும்.

மாநிலங்களவையில் நிறைவேறி, மக்களவையில் நிறைவேறாமல் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா கிடப்பில் உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பெண்கள் மேம்பாட்டிற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி