ஆப்நகரம்

கலவர பூமியான டெல்லி: போலீஸை குற்றஞ்சாட்டும் கெஜ்ரிவால்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 25 Feb 2020, 7:08 pm
டெல்லி மீண்டும் போராட்டக்களமாகியுள்ளது. அடுத்தடுத்து டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீஸார் மட்டுமல்லாமல் சட்டத்துக்கு ஆதரவளிப்பவர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிக்கையாளர்கள் மீதும் கொடூர தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
Samayam Tamil போலீஸை குற்றஞ்சாட்டும் கெஜ்ரிவால்


டெல்லியில் நடைபெற்றுவரும் இந்த கலவரத்தில் நேற்றும், இன்றும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்தை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்ட பகுதி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டெல்லி கலவரத்துக்கு இவர்தான் காரணமா? யார் அவர்?

பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், “வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த மக்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வன்முறையை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது. போராடுவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவோரை எல்லையில் தடுத்து கைது செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலிடத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்காததால் போலீஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை” என்று கூறினார்.

இந்துவா? முஸ்லிமா? என்பதை அறிய பேன்டை கழற்றச் சொன்ன பயங்கரம்!!

இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி