ஆப்நகரம்

ராகுலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்

தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 8 Oct 2016, 8:34 am
புதுதில்லி: தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kejriwal condemns rahul
ராகுலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்


உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களை சந்திக்கும் யாத்திரையை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நடத்தினார். அந்த யாத்திரையின் முடிவில் தில்லி சன்சாத் மார்க்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல், விவசாயிகள், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பணியாற்ற வேண்டும். அதை விடுத்து தேவையில்லாத அரசியலில் அவர் ஈடுபடக் கூாடது. ராணுவ வீரர்கள் இந்த தேசத்திற்காக தங்களது ரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆனால், அவர்கள் சிந்திய ரத்தத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க மோடி முயற்சி செய்கிறார். வீரர்கள் அவர்கள் பணியை செய்து விட்டனர். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். விவசாயிகளுக்கு உதவுங்கள். ராணுவ வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள். அதுதான் உங்களது கடமையாகும். அதற்காகதான் மக்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல் காந்தியின் கருத்து, ராணுவத்தில் விரக்தி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த கருத்தினால் ராகுல் எல்லை மீறி சென்று விட்டார். ரானுவத்தஹி அவமதித்து விட்டார் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் பேச்சுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் பிரதமரின் பின்னால் ஒரே அணியாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி