ஆப்நகரம்

ஸ்வப்னா விவகாரம், பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் அழுத்தம்...

கேரளாவை அதிர வைத்துள்ள தங்கக் கடத்தல் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள்...

Samayam Tamil 9 Jul 2020, 9:55 am
கேரள முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Samayam Tamil ஸ்வப்னா விவகாரம், பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் அழுத்தம்...
ஸ்வப்னா விவகாரம், பினராயி விஜயன் பதவி விலக எதிர்க்கட்சிகள் அழுத்தம்...


கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு, பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சல் குறித்து சந்தேகம் அடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், அதைச் சோதனை செய்தனர். அப்போது அதில், ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த தங்கம் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதாவது அது கடத்தல் தங்கம்.

குறிப்பிட்ட இந்த பார்சல் கேரள முதல்வர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு வந்துள்ளது.

தொடர் விசாரணையில் ஸ்வப்னா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு, இந்த கடத்தல் பணியைச் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த ஸ்வப்னா முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் செயலாளராக உள்ள சிவசங்கரால் பணியமர்த்தப்பட்டவர். இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் ஸ்வப்னாவை காணவில்லை.

இதற்கிடையே இந்த கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குப் பதிலளித்த கேரள முதல்வர், அந்தப் பெண்ணை தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.

Swapna Suresh: யார் இந்த ஸ்வப்னா? கேரளாவை அதிரவைத்த தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணி!

எனினும் எதிர்க்கட்சிகள், கேரள முதல்வர் பினராயி விஜயனும், கடத்தல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்வப்னாவும் நன்கு பரீட்சையமானவர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளன.

சமீபத்தில் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டை ஒருகிணைக்கும் பணியை மேற்கொண்டவர் ஸ்வப்னா. இதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள், “இப்படி இருக்க, தனக்கு அந்தப் பெண்ணை தெரியாது என எப்படி முதல்வர் கூற முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சிகள், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி