ஆப்நகரம்

கேரள மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர்: நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

மாவோயிஸ்ட்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

TNN 27 Nov 2016, 3:34 pm
திருவனந்தபுரம்: மாவோயிஸ்ட்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil kerala cm orders probe in maoist encounter case
கேரள மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர்: நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24ஆம் தேதி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் அஜிதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் போலி என்கவுண்ட்டர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் சிஐடி விசாரணைக்கு கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்ட்டார். இந்நிலையில் நிலம்பூர் என்கவுண்ட்டர் விவகாரம் குறித்து, நீதி விசாரணைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டார்.

Kerala CM orders probe in Maoist Encounter case.

அடுத்த செய்தி