திருவனந்தபுரம்: நாடாளுமன்ற உறுப்பினர் அகமது மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதியன்று கூடியது. அன்றைய தினம் நடைபெட்ட்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அகமதுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அகமதுவின் மரணத்தை கையாண்ட விதம் குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அகமது மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அகமதுவின் குடும்பத்தினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும், பல்வேறு தரப்பில் இருந்து அகமதுவின் மரணத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்தும் தனது கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
Kerala CM P.Vijayan writes to PM requesting enquiry into matter of #EAhamed's death,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதியன்று கூடியது. அன்றைய தினம் நடைபெட்ட்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அகமதுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அகமதுவின் மரணத்தை கையாண்ட விதம் குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அகமது மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அகமதுவின் குடும்பத்தினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும், பல்வேறு தரப்பில் இருந்து அகமதுவின் மரணத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்தும் தனது கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
Kerala CM P.Vijayan writes to PM requesting enquiry into matter of #EAhamed's death,