ஆப்நகரம்

கேரள விமான விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மேலும் இழப்பீடுகள் அறிவிப்பு

கேரளாவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2020, 4:26 pm
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது நேற்றிரவு (ஆகஸ்ட் 7) விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளனர்.
Samayam Tamil kerala cm


இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது கேரள அரசின் சார்பிலும் தற்போது இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிிவித்துள்ளார். அத்துடன் "இந்த விபத்தில் காயமடைந்த அனைவரின் சிகிச்சைக்கான செலவையும் மாநில அரசே ஏற்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா...

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் இதுவரை ஒருவருக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா இழப்பீடு: இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் உள்ளிட்டோருக்கு ஏர்-இந்தியா நிறுவனமும் இழப்பீட்டை அறிவித்துள்ளது.

கோழிக்கோடு விமான விபத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், 12 வயத்துக்குட்டோருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும். படுகாயமடைந்தோருக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படும்" என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி