ஆப்நகரம்

இதில் எங்களுக்கு தமிழகம்தான் முன்னோடி... எதில் தெரியுமா? - பினராயி விஜயன்

“கொண்டாட்டடமாக இருப்பதில் தவறில்லை”. விரைவில் கூடுதலாக கேளிக்கை மையங்கள் (பப்) கேரளாவில் திறக்கப்படும் என்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Samayam Tamil 12 Nov 2019, 6:30 pm
“கொண்டாட்டடமாக இருப்பதில் தவறில்லை”. விரைவில் கூடுதலாக கேளிக்கை மையங்கள் (பப்) கேரளாவில் திறக்கப்படும் என்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
Samayam Tamil Pinaryai_Vijayan_750 new_0


உலகெங்கும் பணி புரியும் ஐ டி ஊழியர்களில் பலரும் கேரள மண்ணைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதிய பல கடிதங்களின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் பெவ்கோ Kerala Beverages Corporation (Bevco) எனப்படும் அரசு பார்கள் சீக்கிரம் புனரமைக்கப்படும். இதன் மூலமாக அரசுக்கு வரும் வருமானம் முறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) போல, இதன் செயல்பாடு சரி செய்யப்படும், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி