ஆப்நகரம்

மதுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் கேரள முதல்வர்

சித்ரவதை செய்து கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மதுவின் குடும்பத்தினரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 2 Mar 2018, 5:48 pm
சித்ரவதை செய்து கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மதுவின் குடும்பத்தினரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Samayam Tamil kerala cm pinarayi visits madhus family announces setting up of care homes
மதுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் கேரள முதல்வர்


கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அட்டபாடி அருகே உள்ள முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள கடையில் அரசி திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்த பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், இன்று அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவை கொலை செய்த அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி