ஆப்நகரம்

கர்நாடகாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

கர்நாடகாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 13 Sep 2016, 12:43 am
திருவனந்தபுரம்: கர்நாடகாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil kerala cm requests railway min sprabhu to arrange 2 spl trains to kerala from karnataka
கர்நாடகாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை


கர்நாடகாவில் காவிரி நதிநீர் விவகாரத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களின் கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தமிழகத்தில் இருந்து வந்த லாரிகள் மற்றும் பேருந்துகள் மீது கன்னட அமைப்பினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்வேறு இடங்களில் சாலைகள்தோறும் டயர்கள் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு நகர் முழுவதும் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வாகனத்தை கொளுத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கேரள மக்கள் தங்கள் பகுதிக்கு திரும்பும் வண்ணம், 2 சிறப்பு ரயில்களை இயக்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஓணம் பண்டிகையை ஒட்டி, ஏராளமான கேரள மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்காகவும் சிறப்பு ரயில்களை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி