ஆப்நகரம்

அப்பல்லோவில் கேரள முதல்வருக்கு சிகிச்சை முடிந்தது

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வருக்கு சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

Samayam Tamil 3 Mar 2018, 7:56 pm
சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வருக்கு சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
Samayam Tamil kerala cm under rest after treatment in apollo hospital
அப்பல்லோவில் கேரள முதல்வருக்கு சிகிச்சை முடிந்தது


சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை அவர் தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோவின் சிறப்பு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

சிகிச்சைக்குப்பின் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பினராயி விஜயன் ஓய்வெடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி