ஆப்நகரம்

பழங்குடி மக்களுக்கு உதவும் கேரள அரசு

கேரள மாநிலத்தில் மது (31) என்ற பழங்குடி மனிதர் மர்ம கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார். பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் பகுதி மக்களால் அடித்துத் தாக்கப்பட்ட பழங்குடி இன இளைஞர். அவரது குடும்பத்துக்கு கேரள கம்யூனிஸ்ட் நஷ்ட ஈடாக 10 லட்சம் வழங்கியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 10:57 pm
கேரள மாநிலத்தில் மது (31) என்ற பழங்குடி மனிதர் மர்ம கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார். பலசரக்குக் கடையிலிருந்து அரிசியைத் திருடினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அந்தப் பகுதி மக்களால் அடித்துத் தாக்கப்பட்ட பழங்குடி இன இளைஞர். தாக்கப்பட்ட மது போலீஸாரால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே இரத்தம் கக்கி இறந்தார்.
Samayam Tamil D6nCorqUcAE1tD5


தாக்குதலில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரே அந்தச் சம்பவத்தைச் செல்ஃபி எடுத்துப் பதிவேற்றிய காட்சி, சமூக வலைதளங்களில் பரபரப்பானது. மதுவைத் தாக்கியதாக பலசரக்குக் கடை உரிமையாளர் மற்றும் அந்தப் பகுதி ஜீப் ஓட்டுநர்கள் உட்பட பதினாறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

அவரது குடும்பத்துக்கு கேரள கம்யூனிஸ்ட் நஷ்ட ஈடாக 10 லட்சம் வழங்கியுள்ளது. இதனையடுத்து ஆதரவற்றுள்ள இதர பழங்குடியினரை தேட தனிப்படை அமைக்கப்பட்டது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட பழங்குடியுனர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இவர்களின் சந்திரிகாவும் ஒருவர். இவர் மதுவின் தங்கை. இவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி நவீன சமூதாயத்தில் வாழ அரசு உதவிகள் செய்யும். இவர்களைப் போன்ற வெளியுலகம் தெரியாமல் காட்டுக்குள் வசிக்கும் மக்களுக்கு உரிய சலுகைகள், இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி