ஆப்நகரம்

ரூ. 16.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கிய கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காசார்கோடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ. 16.5 கோடி வரை நிதி சேகரித்து அதை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 22 Aug 2018, 3:34 pm
கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காசார்கோடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ. 16.5 கோடி வரை நிதி சேகரித்து அதை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.
Samayam Tamil DlBoyccXsAE8NQp
கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதியுதவி


வரலாறு காணாத கனமழையால் கேரளாவின் மொத்த 14 மாவட்டங்களும் மிகுந்த வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளன. தற்போது மழை நின்றுவிட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட சேதங்களால் மக்கள் கடும் சிரமித்திற்குள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தின் பெரும்வாரியான மாவட்டங்களில் நிதி வசூலித்து ரூ. 16.43 கோடி பணத்தை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளது.

மாவட்டங்கள் வாரியாக வசூலிக்கப்பட்ட நிதி:

காசர்கோடு- 1,25,19,688
கண்ணூர்- 6,39,69,320
வயநாடு- 10,00,000
கோழிகோடு- 1,26,00,000
மலப்புரம்- 1,37,44,397
திருச்சூர்- 65,00,000
கோட்டயம்- 44,00,000
கொல்லம்- 51,00,000
திருவனந்தபுரம்- 2,25,40,535

இவற்றில் இர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழா, பத்தினம்தெட்டா மற்றும் திருச்சூர், கோட்டயம் ஆகியவற்றின் வெள்ளம் பாதித்த பகுதிகளை தவிர்த்து நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சுமார் ரூ. 6.3 கோடி பணத்தை கண்ணூர் பகுதியிலிருந்து மட்டும் பெறப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதிக்காக பணம் வழங்கிய கேரளா மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

அது தவிர, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கிட தலைமையிடம் ஆணையிட்டுள்ளது.

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோடியேறி பாலகிருஷ்ணன் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி