ஆப்நகரம்

கேரளாவில் கல்வி நிலையங்களில் பெண்கள் புா்கா அணிய தடை

கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டிக்கு கீழ் செயல்படும் பள்ளி, கல்லூாிகளில் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் புா்கா உடை அணிய தடை விதித்து கல்வி நிலையம் சாா்பில் சுற்றரிக்கை அணுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 May 2019, 8:21 pm
கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொசைட்டிக்கு கீழ் செயல்படும் பள்ளி, கல்லூாிகளில் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் புா்கா உடை அணிய தடை விதித்து கல்வி நிலையம் சாா்பில் சுற்றரிக்கை அணுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil Women in Burqa


இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டா் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் உள்பட யாரும் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணியக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா இஸ்லாமிய கல்வி கழகத்தில் 50 பள்ளிகள், கல்லூா்கள் உட்பட 150 கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 150 கல்வி நிலையங்களிலும் பெண்கள் முகத்தை மூடும் ஆடையை அணிந்து வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 2019 – 2020 கல்வியாண்டில் இருந்து உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடா் வெடிகுண்டு தாக்குதலைத் தொடா்ந்து கேரளாவின் பல பகுதிகளிலும் தேசிய பாதுகாப்பு படையினா் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி