ஆப்நகரம்

98 மதிப்பெண் எடுத்த 96 வயது மூதாட்டிக்கு மடிக்கணினியை பரிசாக வழங்கிய கேரள கல்வித்துறை அமைச்சர் !

கேரளாவில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் 98 மதிபெண் எடுத்த 96 வயது மூதாட்டிக்கு , கேரள கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரநாத் மடிக்கணினியை பரிசாக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 8 Nov 2018, 10:36 am
கேரளாவில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் 98 மதிபெண் எடுத்த 96 வயது மூதாட்டிக்கு , கேரள கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரநாத் மடிக்கணினியை பரிசாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil ker


இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்வது கேரளா. அங்கு 90% மக்கள் கல்வி கற்றவர்களாக உள்ளனர். அந்த மாநில அரசு மேலும் மாநிலத்தின் கல்வி நிலையை உயர்த்த அக்ஷரலக்ஷம் என்ற கல்வியறிவித்தல் இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த இயக்கத்தின் கீழ் வாசிப்பு, எழுத்து மற்றும் அடிப்படைக் கணிதம் ஆகியவற்றுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் இந்த ஆண்டு ஏறத்தாழ 43,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இவர்களில் 96 வயதான ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற மூதாட்டி நூற்றுக்கு 98 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் ‘ தான் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும் தனக்கு கணினி கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது என்றும் ’தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் ஆலப்புழாவில் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு சென்றிருந்த கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரநாத் , கார்த்தியாயினி அம்மாவின் வீட்டு சென்றுமடிக்கணினியை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த எதிர்பாராத பரிசால் கார்த்தியாயினி மற்றும்அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். தனக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியில் தனது பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து காட்டி அசத்தினார் .

அடுத்த செய்தி