ஆப்நகரம்

Kerala Floods: கேரள வெள்ளம் - 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 13 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 3:18 pm
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 13 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil floods-in-kerala-750x430


கேரளாவில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் உள்ள 32 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி , கோட்டையம், பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.வெள்ளதால் கொச்சி விமானநிலையம் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனால் கொச்சி விமாநிலையம் வருகின்ற ஆகஸ்டு 26 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.


இதுவரை வெள்ள பாதிப்பால் 97 பேர் மரணமடைந்துள்ளனர். குடிநீர் , உணவுபோன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவுக்கு, நிலைமை மோசமாகி உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


ஏற்கெனவே 18 குழுக்களாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். நேற்றைய தினத்தில் மேலும் 12 மீட்பு குழுக்கள் கேரளாவிற்கு அனுப்பப்படுள்ளது. சமூக வலைதளங்களில், வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவரை மீட்க வேண்டும் என்ற செய்திகள் மற்றும் பகிர்வுகள் குவிந்து வருகின்றனர்.


இந்நிலையில் கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றுஎர்னாகுளம், இடுக்கி உட்பட மொத்தம் 13 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி