ஆப்நகரம்

கேரளாவுக்கு ரூ.20 கோடி வழங்கிய விமானப்படை வீரர்கள்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு இந்திய விமானப் படை வீரர்கள் சார்பில் ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 4:29 pm
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு இந்திய விமானப் படை வீரர்கள் சார்பில் ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Dlb_jbXVsAAd1gR


வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிகப்பட்ட கேரள மாநில ஓரிரு நாட்களாக மெல்ல இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது. அம்மாநிலத்தின் நிவாரணத்திற்காக பல தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமானப் படை வீரர்கள் இணைந்து ரூ.20 கோடி நிதியைத் திரட்டி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
ரூ.20,000 கோடி மதிப்பிலான இழப்பைச் சந்தித்துள்ள கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,600 கோடி நிவாரண நிதி உதவியைக் கோரியது. ஆனால், ரூ.600 கோடியை மட்டும் வழங்கியுள்ள மத்திய அரசு கள நிலவரத்தை ஆய்வு செய்த பின், மேலும் நிதி வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறது.

அடுத்த செய்தி