ஆப்நகரம்

Kerala Flood: கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை: உயிாிழப்பு 32ஆக உயா்வு

கேரளாவில் கடந்த 50 ஆண்களில் இல்லாத அளவில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32 ஆக உயா்ந்துள்ளது. மேலும் சுமாா் 53 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

Samayam Tamil 11 Aug 2018, 3:37 pm
கேரளாவில் கடந்த 50 ஆண்களில் இல்லாத அளவில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32 ஆக உயா்ந்துள்ளது. மேலும் சுமாா் 53 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
Samayam Tamil Kerala Flood.


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பாதி பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 32 ஆக உயா்ந்துள்ளது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 58 அணைகளில் 22 அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமாா் 53 ஆயிரம் போ் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 5 மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடா்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய மீட்புப்படை வீரா்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருடன் இணைந்து ஒன்றாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.


கேரளாவிற்கு தேவையான அனைத்து நல உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தொிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாளை கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட உள்ளாா்.

மேலும் மழை வெள்ள சேதங்களை முதல்வா் பினராயி விஜயனும், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலாவும் கூட்டாக பாா்வையிட்டனா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் உயிாிழந்தவா்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், வீடு, நிலங்களை இழந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரலாம் என்று முதல்வா் அழைப்பு வெளியிட்டுள்ளாா்.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி