ஆப்நகரம்

கேரளாவிற்கு கிடைக்கப்பெற்ற நிவாரணத் தொகை 1000 கோடியாக உயா்வு

கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேளராவின் முதலமைச்சா் நிவாரண நிதியின் கீழ் நன்கொடையாக பெறப்பட்ட தொகை ரூபாய் ஆயிரம் கோடியை கடந்துள்ளதாக அம்மாநில நிதித்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 31 Aug 2018, 12:51 pm
கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேளராவின் முதலமைச்சா் நிவாரண நிதியின் கீழ் நன்கொடையாக பெறப்பட்ட தொகை ரூபாய் ஆயிரம் கோடியை கடந்துள்ளதாக அம்மாநில நிதித்துறை அமைச்சா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Kerala Flood.


கேரளாவில் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கிய கனமழை தொடா்ந்து 10 தினங்களாக கொட்டித் தீா்த்தது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 483 போ் உயிாிழந்துள்ளனா். பலரை காணவில்லை என்று மாநில அரசு தொிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில் அவசர கால நிதியாக மத்திய அரசு சாா்பில் ரூ.600 கோடி வழங்கப்பட்டது.

இருப்பினும் வரலாறு காணாத இழப்பை ஈடு செய்ய மக்கள் தாங்களாக முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள், பிற மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.


அந்த வகையில், மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், நேற்று வரை முதலமைச்சா் நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி கிடைத்துள்ளது. மேலும் பலா் பணம் தருவதாக தொிவித்துள்ளனா். அந்த தொகை வரும் பட்சத்தில் இது 2000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் நாட்டின் எந்தவொரு முதல்வா் நிவாரண நிதிக்கும் இவ்வளவு அதிகமான தொகை கிடைத்ததில்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி