ஆப்நகரம்

கேரள வெள்ளம்: உடமைகளை இழந்ததால் 3 பேர் தற்கொலை

கேரள வெள்ளத்தினால் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Aug 2018, 8:53 pm
கேரள வெள்ளத்தினால் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 65504947


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழ்கள் வெள்ளத்தில் நாசமானதால் தற்கொலை செய்துகொண்டார் எனவும் மற்றொருவர் தன் வீடு இடிந்து விழுந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொச்சி அருகே உள்ள கொதாட் தீவில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றும் தெரிந்துள்ளது.

இதனை உறுதி செய்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “வெள்ளத்தில் காப்பாற்றப்பட்ட அனைவருமே புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி