ஆப்நகரம்

Kerala Floods: கேரளா வெள்ளத்திற்கு நிவாரணம் நிதி திரட்ட புதிய லாட்டரி திட்டம் அறிமுகம்

வெள்ள நிவாரண நிதியை திரட்டும் வகையில் ‘ஆஸ்வாஸ்’ எனும் லாட்டரியினை கேரளா அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2018, 8:15 pm
வெள்ள நிவாரண நிதியை திரட்டும் வகையில் ‘ஆஸ்வாஸ்’ எனும் லாட்டரியினை கேரளா அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil kerala flood


தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி திட்டம் கேரளாவில் மிக அமோகமாக செயல்பட்டு வருகின்றது. தற்போது அரசே இந்த லாட்டரி மூலம் வெள்ள நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

புதிதாக கேரளா அரசு மூலம் ‘ஆஸ்வாஸ்’ லாட்டரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளாது. இதில் கிடைக்கும் லாபம் அனைத்தும் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.

‘ஆஸ்வாஸ்’ (Ashwas) லாட்டரி ரூ. 250க்கு விற்கப்படும் என்றும், இதன் முடிவு அக்டோபர் 3ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த லாட்டரியின் ஒவ்வொரு சீரியலும் அதிகபட்சம் ஒரு லட்சம் பரிசு வெல்லலாம், அதோடு, 10,80,000 லாட்டரிகளுக்கு தலா 5 ஆயிரம் பரிசாக கிடைக்கும் என கூறியுள்ளார்.

இந்த லாட்டரியின் மூலம் 100 லட்சம் திரட்டுவதே இலக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எல்லா செலவுகளும் போக அரசுக்கு ரூ. 100 கோடி கிடைக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kerala flood news: The entire proceeds of the lottery will be contributed to the CMDRF. The purpose of this special lottery is reportedly to raise Rs 100 crore for flood-hit Kerala.

அடுத்த செய்தி