ஆப்நகரம்

Kerala Flood: வழக்கத்தைக் காட்டிலும் 154% அதிக மழை!! கனமழை நாளை வரை நீடிக்கும் என தகவல்!!

கேரளாவில் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் தற்போது, 154% அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2018, 4:24 pm
கேரளாவில் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் தற்போது, 154% அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil வழக்கத்தைக் காட்டிலும் 154% அதிக மழை!! கனமழை நாளை வரை நீடிக்கும் என தகவல்!!
வழக்கத்தைக் காட்டிலும் 154% அதிக மழை!! கனமழை நாளை வரை நீடிக்கும் என தகவல்!!


கேரளாவில் பெய்துவரும் வரலாறு காணாத மழை காரணமாக, கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 324 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசியல் கட்சிகளும், திரைப் பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்து வருகின்றனர். ஒரு சில தன்னார்வல அமைப்புகளும் நிவாரணப் பொருட்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர். மேலும், இன்று காலை கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்ட பிரதமர் மோடி, கேரளாவிற்கு உடனடி நிவாரணமாக ரூ.500 கோடியை அறிவித்தார்.

இந்நிலையில், கேரளாவில் பெய்துள்ள மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் தேவி கூறுகையில், “இம்மாதத்தில்(ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை) 619.5 மிமீ மழை பெய்துள்ளது. பொதுவாக 244.1 மிமீ மழைதான் பெய்திருக்க வேண்டும். இது இயல்பை விட 154% அதிகம். மழையின் அளவு தற்போது குறைந்துள்ளது. இனி மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யலாம்” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி