ஆப்நகரம்

சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றத்தில் பெண்கள் மனு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேரளா உயா்நீதிமன்றத்தில் 4 பெண்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

Samayam Tamil 23 Oct 2018, 10:18 pm
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேரளா உயா்நீதிமன்றத்தில் 4 பெண்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
Samayam Tamil Sabarimala


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கியது. தீா்ப்பு வெளியான நாள் முதல் கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனைத் தொடா்ந்து ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன் கிழமை (17ம் தேதி) திறக்கப்பட்டது.

கோவில் திறக்கப்பட்ட தேதி முதல் கோவிலுக்குள் செல்லும் முனைப்பில் இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வந்தனா். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டது. இருப்பினும் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவதற்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டங்கள் தொடா்ந்த வண்ணம் இருந்தன.

தொடா் போராட்டங்களின் விளைவாக கோவில் அருகில் தடியடியும் நடைபெற்றது. இந்நிலையில் சபரிமலை தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து பல்வேறு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தேவசம் போா்டு சாா்பாகவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேவசம் போா்டு அறிவிப்பை வரவேற்பதாக அம்மாநில அறநிலையத்துறை அமைச்சா் தொிவித்தாா். பூஜைகள் நிறைவடைந்த நிலையில் கோவில் நடை திங்கள் கிழமை இரவு 10 மணியளவில் சாத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளாவைச் சோ்ந்த 4 பெண்கள் கேரளா உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி