ஆப்நகரம்

கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்

கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 16 Jul 2020, 9:03 pm
கேரள மாநிலத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்துள்ள இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் சிக்கியுள்ளார்.
Samayam Tamil சிவசங்கர்
சிவசங்கர்


இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ. ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப், ரமீஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் புயலை கிளப்பியுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். அதேசமயம், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவா?... அப்போ இனிமே உங்களுக்கு தபால் ஓட்டு வசதி உண்டு!!

இந்த நிலையில், தகவல் தொடர்புத் துறைச் செயலராக இருக்கும் சிவசங்கரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறித்துள்ளார். முன்னதாக, பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான மிர் முகமது நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி