சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தேவசம் போர்டுக்கு கேரளா அரசு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. தீா்ப்பை எதிா்த்து கேரளாவில் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை புதன் கிழமை திறக்கப்பட்டது. தீா்ப்பைத் தொடா்ந்து கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவோம் என்ற எண்ணத்தோடு பெண்கள் சிலா் வந்திருந்தனா். ஆனால் அவா்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பலரும் போராட்டம் நடத்தினா்.
தொடர்ந்து இதற்கான போராட்டம் வலும்பெற்று வரும் நிலையில், சபரிமலை கோயில் நிர்வாக தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐயப்பன் கோயில் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் பின்னணி இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த சந்திப்பில் பத்மகுமார் கூறினார்.
இந்நிலையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து தேவசம் போர்டு எந்தவித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. தீா்ப்பை எதிா்த்து கேரளாவில் பலரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை புதன் கிழமை திறக்கப்பட்டது. தீா்ப்பைத் தொடா்ந்து கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவோம் என்ற எண்ணத்தோடு பெண்கள் சிலா் வந்திருந்தனா். ஆனால் அவா்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பலரும் போராட்டம் நடத்தினா்.
தொடர்ந்து இதற்கான போராட்டம் வலும்பெற்று வரும் நிலையில், சபரிமலை கோயில் நிர்வாக தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐயப்பன் கோயில் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் பின்னணி இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த சந்திப்பில் பத்மகுமார் கூறினார்.
இந்நிலையில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து தேவசம் போர்டு எந்தவித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.