ஆப்நகரம்

இவ்வளவு மோசமான அரசு பள்ளி கட்டிடமா? இடிச்சு தள்ளுங்க; விஸ்வரூபம் எடுக்கும் பாம்பு கடி!

வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாநில அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Samayam Tamil 25 Nov 2019, 12:49 pm
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மகள் ஷகாலா ஷெரின்(10) அருகிலுள்ள சர்வஜன அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil Snake Bit


கடந்த 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் இருந்த துளை வழியே நுழைந்த பாம்பு ஷெரினை கடித்தது. அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

மகாராஷ்டிர ஆட்சி அமைப்பு விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர், உறவினர்கள், மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வழியாக விஸ்வரூபம் எடுத்தது.

இதுபற்றி பத்தேரி தாலுகா அரசு மருத்துவர் ஜிஷாமெரின்ஜாய் கூறுகையில், சம்பவம் நடந்த நாளன்று போதிய மருந்துகள் இல்லை. இதனால் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் கருணாகரன், துணை முதல்வர் மோகனன், பத்தேரி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜிஷாமெரின்ஜாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரா ஆளுநருடன் என்சிபி, காங்கிரஸ், சிவ சேனா கூட்டணி சந்திப்பு!!

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அரசு பள்ளியை மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதில் மாணவி ஷெரின் இருந்த வகுப்பறை பாதுகாப்பு இல்லை என கண்டறிந்தனர். உடனே கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று அறிக்கை அளித்தனர்.

இதுகுறித்து பத்தேரி நகர சபை தலைவர் ஷாபு கூறுகையில், மாணவி ஷெரின் படித்த வகுப்பறை 30 ஆண்டுகள் பழமையானது. இதனை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

என்ன நடக்குது மும்பையில்? தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஹோட்டலுக்கு மாற்றம்!!

கேரள கல்வித்துறை துணை இயக்குநர் இப்ராகிம் தோனிக்கரா கூறுகையில், மாணவி ஷெரினுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட, ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாணவர்கள் மீது பள்ளி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி