ஆப்நகரம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளம்; பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.,28 வரை விடுமுறை!

கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 9:44 am
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kerala Floods


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது.

இதனால் திறந்துவிடப்பட்ட நீரால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக கேரள மாநிலம் தனித் தனித் தீவுகள் போன்று காணப்படுகிறது.

கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

காசர்கோட் தவிர 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை, கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துவிதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Kerala Govt announces holiday for schools, colleges upto august 28.

அடுத்த செய்தி