ஆப்நகரம்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு!

திருவனந்தபுரம் : சபரிமலை தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Nov 2018, 11:13 am
சபரிமலை விவகாரத்தை பா.ஜ.க., அரசியலாக்குவதாகவும், பிரச்னையை உருவாக்குவதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தவால், பெரும் போராட்டம் வெடித்தது. இது தொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3000க்கும் மேற்பட்டோர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 3


இந்நிலையில், கார்த்திகை மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடைதிறக்கப்படவுள்ளது. தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் வரும் ஜனவரி 22 ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடைகோரி வழக்கறிஞர்கள் முறையிட்டதை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. வரும் ஜனவரி 22க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி