ஆப்நகரம்

ஜெயலலிதா மறைவு: கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிப்பு

ஜெயலலிதாவின் மறைவிற்கு கேரளா இன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

TNN 6 Dec 2016, 8:55 am
திருவனந்தபுரம்: ஜெயலலிதாவின் மறைவிற்கு கேரளா இன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Samayam Tamil kerala govt declares holiday for all government offices and educational institutions
ஜெயலலிதா மறைவு: கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிப்பு


முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி, தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (6ம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி, கேரளாவில் ஒருநாள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Kerala Govt declares holiday for all government offices and educational institutions.

அடுத்த செய்தி