கேரள வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை மீட்க உதவிய பேரிடர் மீட்புப் படையினருக்கு அம்மாநில அரசு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்துள்ளது.
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தபட்சம் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த வெள்ளத்தினால் அந்த மாநிலம் ரூ.20,000 கோடி மதிப்பிலான சேதத்தை அடைந்துள்ளது.
இரண்டு வாரங்களாக நிலவிய வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க ராணுவம், விமானப் படை, கப்பல் படை, பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்தவர்களும் கேரளாவில் தீவிரமாக உழைத்தனர். மீனவர்களுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு தங்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் பங்கெடுத்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையுடன் தனது பணியை முடித்துக்கொண்ட பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப் படை, கப்பல் படை, ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களை வழியனுப்பும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு மீட்புப் பணியில் கைகொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தபட்சம் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த வெள்ளத்தினால் அந்த மாநிலம் ரூ.20,000 கோடி மதிப்பிலான சேதத்தை அடைந்துள்ளது.
இரண்டு வாரங்களாக நிலவிய வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க ராணுவம், விமானப் படை, கப்பல் படை, பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்தவர்களும் கேரளாவில் தீவிரமாக உழைத்தனர். மீனவர்களுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு தங்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் பங்கெடுத்தனர்.