ஆப்நகரம்

வனத்துறைக்கு 400 கோடி நிதியுதவி: கேரள அமைச்சர் கோரிக்கை

கேரள வனத்துறையின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.400 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசிடம் அம்மாநில அமைச்சர் கே.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.

PTI 22 Jun 2016, 6:27 pm
திருவனந்தபுரம்: கேரள வனத்துறையின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.400 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசிடம் அம்மாநில அமைச்சர் கே.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil kerala govt seeks rs 400 cr from centre for forest dept works
வனத்துறைக்கு 400 கோடி நிதியுதவி: கேரள அமைச்சர் கோரிக்கை


திருவனந்தபுரத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்துப் பேசிய கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மாநில வனத்துறையின் செயல்திட்டங்கள் பற்றி விவரித்துப் பேசிய அவர் வனத்துறையின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.400 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வன விலங்குகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க ரூ.200 கோடியும் வனப்பகுதிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் நலத்திட்டங்களுக்காக தலா ரூ.100 கோடியும் அளிக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“தென்னிந்தியாவில் மிகப்பெரிய வனப்பரப்பை உள்ளடக்கிய மாநிலம் கேரளா தான். கேரள வனத்துறை நிதியிலிருந்து 10 சதவீதம் வனப்பகுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், கேரள வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் நலனுக்காக தனியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கே.ராஜூ கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி