ஆப்நகரம்

சர்ச்சைக்குரிய அவசர சட்டத்துக்கு கேரளா ஆளுநர் ஒப்புதல்

கேரளாவில் காவல்துறை அவசர சட்ட திருத்தத்திற்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 22 Nov 2020, 8:46 pm
கேரள மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களை தடுக்க போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கொண்டு வந்தது.
Samayam Tamil ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்


தனிநபர்களை கொடுமைப்படுத்துதல், அவமதிப்பது மற்றும் எந்தவொரு தகவல்தொடர்பு ஊடகம் மூலமாகவும் அவதூறு பரப்புவதை நிறுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10,0000 அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த சட்டதிருத்தம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்களை தருவதோடு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது ஒப்புதலை வழங்கினார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் இந்த அவசர சட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி