ஆப்நகரம்

Kerala High Court: 18 வயது ஆணுடன் 19 வயது பெண் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் பின்பற்றி வரும் சமூக கட்டமைப்புகளுக்கு சவால் விடும் வகையிலான ஒரு வழக்கில் இன்று கேரளாவின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 3:51 pm
இந்தியாவில் பின்பற்றி வரும் சமூக கட்டமைப்புகளுக்கு சவால் விடும் வகையிலான ஒரு வழக்கில் இன்று கேரளாவின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil kerala-high-court-movie
19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் வாழ அனுமதி


கேரளா மாநில உயர்நீதிமன்றத்தில் 18 வயதான ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் 19 வயதான தன் மகளை தன்னிடம் ஒப்படைக்கும் படி மொஹமத் ரியாத் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் பிரிவு 2 (அ) குழந்தை திருமண சட்டத்தின் படி 21 வயது பூர்த்தி அடையாத தனது மகள் இன்னும் குழந்தை தான் எனவும், அவர் திருமண வயதை எட்டும் வரை பெற்றோருடன் இருக்கவேண்டும் என மொஹமத் ரியாத் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கேரளாவே உற்று நோக்கி வந்த இந்த வழக்கு, அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.பி. ஜோதிந்திரநாத் மற்றும் வி. சிதம்பரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் இளைஞருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் வயதை எட்டிவிட்டார்” என்றனர்.

மேலும் திருமணமாகாமல் மேஜராகும் வயதை எட்டிய ஆண், பெண் சேர்ந்து வாழ்வதை நீதித்துறையும் அனுமதிக்கிறது. அப்பெண்ணிற்கு சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் உள்ளது.

அதனால் 19 வயது பெண், 18 வயதான ஆணுடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று பெண்ணின் தந்தை மொஹமத் ரியாத் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.

அடுத்த செய்தி