ஆப்நகரம்

வைரஸ் காய்ச்சலால் கதிகலங்கிய கேரளா; இதுவரை 103 பேர் பலி...!

தொடரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 18 Jun 2017, 4:57 pm
திருவனந்தபுரம்: தொடரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil kerala in the grip of viral fever 103 deaths so far
வைரஸ் காய்ச்சலால் கதிகலங்கிய கேரளா; இதுவரை 103 பேர் பலி...!


கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு வைரஸ் தொற்று காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை, பொதுமக்கள் எச்1என்1, லெப்டோஸ்பைரோசிஸ், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளது. கடந்த 6 மாதங்களில் 103 பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 53 பேர் எச்1என்1 காய்ச்சல் காரணமாகவும், 13 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் இருந்து உருவாகும் கொசுக்கள் தான், இந்த காய்ச்சலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுற்றுப்புறத் தூய்மையை பேணுமாறு வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தூய்மையை வலியுறுத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Kerala in the grip of viral fever, 103 deaths so far.

அடுத்த செய்தி