ஆப்நகரம்

கல்விக்காக கிட்னி விற்க தயாரான தாய்: தடுத்து கரம் கொடுத்த மக்கள்

குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்கச் சென்ற குடும்பத்திற்கு கேரள மக்கள் பண உதவி செய்துள்ளனர்.

TNN 26 Jun 2017, 2:27 pm
குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்கச் சென்ற குடும்பத்திற்கு கேரள மக்கள் பண உதவி செய்துள்ளனர்.
Samayam Tamil kerala kids cash for mom willing to sell kidney for her children
கல்விக்காக கிட்னி விற்க தயாரான தாய்: தடுத்து கரம் கொடுத்த மக்கள்


ஆக்ராவைச் சேர்ந்தவர் ஆர்த்தி ஷர்மா. இவர் தன்னுடைய கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதில், கணவரின் வியாபாரம் நொடித்துப் போக, ரூ.5000 சம்பளத்திற்கு டிரைவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு வீட்டு வாடகையும் கட்ட முடியாமல், குழந்தைகளின் படிப்புக்கு உதவ முடியாமலும் திணறி வருகிறார்.

முதல்வரின் உதவியை நாடிய அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், முகநூலில் சகயோக சங்கேதன் என்னும் பக்கத்தில் தனது சிறுநீரகத்தை விற்கத்தயார் என்றும், தன்னுடைய ரத்த குரூப் பி பாசிட்டிவ் என்றும் தெரிவித்திருந்தார்.



இதனையறிந்த கேரளாவின் தாலிபரம்புரா தொகுதி எம்.எல்.ஏ. ஜேம்ஸ் இந்த விஷயத்தை பற்றி அறிந்து அங்குள்ள 222 பள்ளிகளில் நிதியுதவி உண்டியலை வைத்தார். அதுமட்டுமின்றி ஆர்த்தி விரும்பினால், அவரின் குழந்தைகளுக்கு கேரளாவில் கல்வி அளிக்க உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் வசூலானது. இதனை ஆர்த்தியின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஆர்த்தி கூறுகையில், குழந்தைகளின் கல்விக்கு உதவி கிடைக்காமல் தான் இந்த மாதிரி விற்கத் தயாரானேன். தற்போது இந்த உதவியினால், தான் மனம் மகிழ்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி