ஆப்நகரம்

பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்ததற்காக வளர்ப்பு நாயை துரத்திவிட்ட உரிமையாளர்

கேரளா மாநிலத்தில் பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக பொமேரியன் நாயை அதன் உரிமையாளர் வீட்டில் இருந்து துரத்திவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Jul 2019, 10:43 am
அண்டை வீட்டில் வளர்க்கப்படும் வேறு நாட்டு நாயுடன் உறவு வைத்ததற்காக பொமேரியன் இன நாயை அதன் வளர்ப்பாளர் துரத்திவிட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.
Samayam Tamil Bomerian Dog


கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த சாகாய் பகுதியில் பொமேரியன் இன வளர்ப்பு நாய் ஒன்று ஆதரவற்ற நிலையில் திரிந்துகொண்டு இருந்தது. அதனை பார்த்த மக்கள் விலங்குகள் நல ஆர்வலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்து நாயை மீட்ட விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன், நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ந்துபோனார்.


Also Read: சென்னையில் பட்டா கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்

நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கடிதத்தில், “இது மிகவும் நல்ல பழக்கங்களை கொண்ட நாய். இது குறைக்க மட்டும் தான் செய்யும், யாரையும் கடிக்காது. இந்த நாய் பால், முட்டை, பிஸ்கெட்டை அதிகம் சாப்பிடும். வெறுக்கத்தக்க செயல்கள் எதையும் செய்யாது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இறுதி வரியில், இந்த நாய் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் வேறொரு இனத்தைச் சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக் கொண்டதால் இந்த நாயை துரத்திவிடுவதாக குறிப்படப்பட்டு இருந்தது.

Also Read: வெளுத்து வாங்கப் போகும் கன மழை; தமிழக லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!


இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் கூறுகையில், “அது வெறும் நான்கு கால் பிராணி. அதற்கு என்ன தெரியும். பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக் கொண்டது ஒரு குற்றமா? தற்போது அந்த நாய் வேறொருவரால் தத்தெடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் தனது முன்னாள் உரிமையாளர் வந்து தம்மை மீண்டும் மீட்டுச் செல்லமாட்டாரா?" என்ற ஏக்கத்துடன் சாலையை பார்த்தபடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி