ஆப்நகரம்

53 ஆண்டுகளாக தேடி வந்த அண்ணனை டிவி பார்த்த போது கண்டுப்பிடித்த தம்பி

காதலுக்காக குடும்பத்தை விட்டு 53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற அண்ணனை டிவி நிகழ்ச்சி மூலம் அவரது தம்பி கண்டுப்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 5:48 pm
காதலுக்காக குடும்பத்தை விட்டு 53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற அண்ணனை டிவி நிகழ்ச்சி மூலம் அவரது தம்பி கண்டுப்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
Samayam Tamil 53 ஆண்டுகளாக தேடி வந்த அண்ணனை டிவி பார்த்த போது கண்டுப்பிடித்த தம்பி


கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 14 குழந்தைகள் பிறந்த நிலையில், அதில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அவர்களுடைய மகன்களில் ஒருவரான அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள், தெருக்கூத்து உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார். அப்போது தன்னுடன் பணியாற்றி பெண்ணை அம்முதாசன் திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது பெற்றோர்கள் மனமுடைந்த நிலையில், அம்முதாசன் மனைவியுடன் சென்னை வந்தார். இங்கு சில படங்களில் நடித்தார்.

ஆனால் தொடர்ந்து நிலவி வந்த வறுமை காரணமாக மீண்டும் கேரளாவுக்கு சென்றார். அங்கு இருவருக்கும் குழந்தை பிறந்தது. ஆண்டுகள் பல கடந்தன, ஆனால் அம்முதாசன் தனது குடும்பத்தை தொடர்பு கொள்ளவே இல்லை. இந்நிலையில் அவருடைய மகளுடைய கணவர் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராக பங்கெடுத்தார். அதற்காக நடைபெற்ற படப்பிடிப்புக்கு மகள் கணவருடன் அம்முதாசனும் சென்றிருந்தார்.

அங்கு அவரது மாப்பிள்ளை சிறப்பாக போட்டியில் விளையாடியதால், அதுகுறித்து அம்முதாசனிடம் நிகழ்ச்சியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது தன்னுடய வறுமை நிலையை பற்றியும், குடும்பத்தை பற்றியும், மனைவி மற்றும் குழந்தைகளை பற்றியும் அவர் பல விஷயங்கள் பேசினார். இதை பார்த்த சிலர், அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். உடனே பாலகிருஷ்ணன், தொலைக்காட்சி நிறுவனத்திடன் பேசினார். அவர்கள் அம்முதாசன், பாலகிருஷ்ணனின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த இரு சகோதரர்களும் ஒரு இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து கொண்டனர். இது பார்த்தவர் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. இந்த சம்பவம் கேரள ஊடகங்கலில் வெளியாகி பரபரப்புச் செய்தியானது.

அடுத்த செய்தி