ஆப்நகரம்

தமிழக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்..!

கேரள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தமிழக பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கிய கேரள அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரியை திட்டியதாக மற்றும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

TNN 26 Apr 2017, 11:44 am
கேரள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தமிழக பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கிய கேரள அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரியை திட்டியதாக மற்றும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்.
Samayam Tamil kerala minister mm mani under fire for calling ias officer mad insulting women tea plantation workers
தமிழக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்..!


கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கேரள மாநிலம் இடுக்கியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அம்மாநில மின் துறை அமைச்சராக எம்.எம்.மணி என்பவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது மூணாரில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தமிழக பெண்கள், 2015-ஆம் ஆண்டு சம்பள உயர்வு கேட்டு நடத்திய போராட்டத்தை இழிவாக பேசினார்.

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்கள் நன்றாக குடித்துவிட்டு போதையில் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அங்கு விபச்சாரம் கூட நடைபெற்றிருக்கலாம் எனவும் அமைச்சர் மணி கொச்சையாக பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு கேரளா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. நேற்று முன் தினம் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இடுக்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பெண்கள் மட்டுமல்லாது, அம்மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் எம்.எம்.மணி திட்டியது தற்போது தெரியவந்துள்ளது.
“இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மத நிறுவனங்கள் அமைந்துள்ள நிலங்களுக்கு, சரியான பத்திரப்பதிவு இல்லை. அந்த நபரை (ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்) ஊலம்பரா மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும். ” என எம்.எம்.மணி பேசியுள்ளார். இதற்கும் கேரள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் மணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னுடைய பேச்சில் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை எனவும் ஊடகங்கள் திட்டமிட்டு தன் மீது அவதூறு பரபரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kerala Minister MM Mani Under Fire For Calling IAS Officer 'Mad', Insulting Women Tea Plantation Workers

அடுத்த செய்தி