ஆப்நகரம்

பொறுப்பில்லாமல் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சர் ராஜுவின் பதவிக்கு வேட்டு

கேரளா மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோரமான வேளையில், அம்மாநில வனத்துறை அமைச்சர் ராஜு ஜெர்மனிக்கு சென்றிருப்பதால், கட்சி மேலிடம் பதவியை பறிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 8:34 am
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோரமான வேளையில், அம்மாநில வனத்துறை அமைச்சர் ராஜு ஜெர்மனிக்கு சென்றிருப்பதால், கட்சி மேலிடம் பதவியை பறிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Kerala minister raju


வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மாநிலத்திற்கு உலகமெங்கும் வருத்தமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேரளா மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் துயரத்தை துடைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அதிருப்தி
இப்படி மாநிலமே தவித்து வரும் நிலையில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜு, ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடக்கும், சர்வதேச மலையாளிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றார்.

பயணம் ஒத்தி வைப்பு
முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கேரளா வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அவரின் பயணத்தை ஒத்தி வைத்து பணிகளை முடிக்கி விட்டுள்ளார்.

பதவி பறிப்பு:
ஆனால் வனத்துறை அமைச்சர் ராஜு இந்த இக்கட்டான சூழலில் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என கட்சி மேலிடமும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது. இதனால் அவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்து செய்து கேரளா திரும்ப முடிவெடுத்திருப்பதாக அவரின் தனிச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நேரத்தில், அமைச்சர் ஜெர்மனிக்கு சென்றது, கட்சி மேலிடத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, அமைச்சர் ராஜு, உடனடியாக கேரளா திரும்ப முடிவு செய்திருப்பதாக, அவரது தனிச் செயலர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி