ஆப்நகரம்

நீட் தேர்வு: தமிழர்களை நெகிழ வைத்த கேரள முஸ்லீம்கள்!

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க கேரள இஸ்லாமியர்கள் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.

Samayam Tamil 5 May 2018, 5:42 pm
திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க கேரள இஸ்லாமியர்கள் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.
Samayam Tamil 609629-tamil-nadu


தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் போதுமான அளவு அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 5 சிறப்பு பேருந்துகளில் நெல்லையிலிருந்து தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு தேர்வு எழுத அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணாகுளத்தில் உள்ள முஸ்லிம்கள் மசூதிகளில் இடம் கொடுத்துள்ளனர்.

கேரள சிஐடியு, சிபிஎம் ஆட்டோ தொழிற்சங்கங்களும் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளன.

அடுத்த செய்தி