ஆப்நகரம்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஷப்புக்கு எதிராக சாட்சி கூறிய பாதியார் மர்ம மரணம்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியாக கருத்தப்பட்ட பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2018, 2:49 pm
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியசாட்சியாககருத்தப்பட்ட பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 136640-keralanuncase


கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தேவாலயத்திற்கு உட்பட்ட பி‌ஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். இருப்பினும் முலக்கல்லிடம் கேரள தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம் பிராங்கோ முலக்கல் தரப்பில் ஜாமின் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது, பின்னர் மீண்டும் பிராங்கோ முலக்கல் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது மனுவை ஏற்றுக்கொண்ட கேரளா உயர்நீதிமன்றம் பிராங்கோ முலக்கல்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாககருதப்பட்ட, 60 வயதான குரியகோஸ் இன்று காலை ஜலந்தரில் உள்ள போக்பூர் என்ற பகுதியில்உள்ளதனது அறையில் சடலாமாக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தார் அளித்த பேட்டியில், இந்த சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிஷப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த காரணத்தினால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குரியகோசின் சகோதரர் மலையாள டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்பாக மாத்ருபூமி என்ற மலையாள பத்திரிக்கைக்கு குரியகோஸ் அளித்த பேட்டியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது .

அடுத்த செய்தி