பேராயர் மீதான பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி டெல்லியில் உள்ள வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் கத்தோலிக்க பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று ஐந்து கன்னியாஸ்திரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் பிரதிநிதி கியாம்படிஸ்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2016ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பேராயர் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியே சொல்வதற்கு பயந்து சொல்லாமலே விட்டு விட்டேன் என்றும் தெரிவித்துள்ளா். மேலும், தற்போது அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால், திருச்சபை எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் கத்தோலிக்க பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று ஐந்து கன்னியாஸ்திரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் பிரதிநிதி கியாம்படிஸ்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2016ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பேராயர் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியே சொல்வதற்கு பயந்து சொல்லாமலே விட்டு விட்டேன் என்றும் தெரிவித்துள்ளா். மேலும், தற்போது அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால், திருச்சபை எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.