ஆப்நகரம்

நிபா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 11 ஆனது

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மற்றொருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 24 May 2018, 12:19 pm
கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மற்றொருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil kerala-health-outbreak-virus-alert-after-nipah_1cd61d22-5efd-11e8-828c-aa2fd3852b8f


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த மே 21ஆம் தேதி காய்ச்சலால் உயிரிழந்த இரண்டு பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது நிபா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் கேரளாவில் பலியானார்கள்.

இந்நிலையில், கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவர் இன்று நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். இதனால், நிபா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நிபா வைரஸ் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி