ஆப்நகரம்

மலையாள நடிகையை பார்த்ததுமே.. அருகில் அமர்ந்து 'சுய இன்பம்'.. இளைஞரை கொத்தோடு தூக்கிய போலீஸ்!

கேரளாவில் ஓடும் பஸ்ஸில் நடிகையிடம் சில்மிஷம் செய்ததோடு, சுய இன்பத்திலும் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 19 May 2023, 4:46 pm
திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள நடிகையை பார்த்ததுமே கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் செய்த காரியம் தற்போது அவரை கம்பி எண்ண வைத்திருக்கிறது. மேலும், அந்த நடிகை அழகாக இருந்ததால் ஆசையை கண்ட்ரோல் செய்ய முடியாமல் இப்படி செய்துவிட்டதாகவும் போலீஸிடம் அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.
Samayam Tamil kerala actress nantida


கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான நந்திதா பயணம் செய்து கொண்டிருந்தார். இதனிடையே, அந்தப் பேருந்து அங்கமாளி அருகே வந்த போது கோழிக்கோட்டை சேர்ந்த சாவத் (30) என்ற இளைஞர் ஏறியுள்ளார்.

பஸ்ஸில் நடிகை நந்திதாவை பார்த்ததுமே, மற்ற காலி இருக்கைகளை விட்டுவிட்டு அவர் அருகே சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார் சாவத். மெல்ல அந்த நடிகையை சீண்டுவது, கண்ட இடங்களில் கை வைப்பது என பாலியல் தொந்தரவுகளை கொடுத்தபடியே வந்துள்ளார்.
"கதவை தொறக்குறியா.. இல்ல என் பொண்டாட்டிய கொல்லவா".. நடுவானில் விமானத்தில் பயணி செய்த ரகளை!
தான் பிரபலம் என்பதால் சிறு பிரச்சினை என்றாலும் பூதாகரமாகி விடுமே என நினைத்து நடிகை நந்திதாவும் அந்த இளைஞரின் கைகளை தட்டிவிட்டபடி வந்திருக்கிறார். ஒருகட்டத்துக்கு மேலே, மிக ஆபாசமான செயலில் அந்த இளைஞர் இறங்க ஆரம்பித்தார். அந்த இடத்தில் வைத்தே சுய இன்பம் செய்ய தொடங்கினார். இளைஞரின் இந்த அநாகரீக செயலை கண்ட அந்த நடிகை நந்திதா பொறுமையை இழந்து அவரை கண்டபடி திட்டினார். மேலும், அவரது கேவலான செயல்கள் குறித்து நடத்துனரிடம் கூறினார்.

இதையடுத்து, பஸ் நிறுத்தப்பட்டதும் ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அவர் திடீரென அவர்களின் பிடியில் இருந்து நழுவி ஓடினார். பின்னர் பொதுமக்கள் அவரை விரட்டிப்பிடித்து ஒரு காட்டு காட்டியுள்ளனர். அதன் பின்னர் போலீஸாரிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். இதுவரை தொலைக்காட்சியில் பார்த்த நடிகையை நேரில் பார்த்தும் தன்னால் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், அவர் அழகாக இருந்தால் இப்படி செய்துவிட்டேன் எனவும் அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி