ஆப்நகரம்

இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற பொன்னார்! தடுத்து நிறுத்திய போலீசார்!!

மாலை அணியாத தொண்டர்களுடன் வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, பம்பை அருகே கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Samayam Tamil 21 Nov 2018, 1:03 pm
இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, பம்பை அருகே கேரள போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil pon radhakrishanan sabarimala


மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பூஜைக்காக 41 நாட்கள் நடை திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கோவிலுக்கு வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போ
லீசார் தடுத்து நிறுத்தினர்.

பொதுவாக சபரிமலைக் கோவிலுக்குள் மாலை அணிந்தவர்கள் மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே விரதம் இருந்து கன்னியாகுமரியில் இருந்து வந்துள்ளார். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனோடு வந்த சில பா.ஜக தொடண்டர்கள் மாலை அணியாமல் கோவிலுக்குள் நுழைய முயற்சித்தனர். இதைக்கண்டு சுதாரித்துக் கொண்ட கேரள போலீசார், அவர்களை பம்பை அருகே தடுத்து நிறுத்தினர். இதனால், கேரள போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மத்திய அமைச்சரை எப்படி கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கலாம் என்று பாஜகவினர் போலீசாருடன் சண்டைக்கு சென்றனர்.

ஏற்கனவே, சபரிமலை கோவிலில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரையே கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி