ஆப்நகரம்

Kerala: தலைமைச் செயலகம் முன் போரட்டம்... பாஜகவினருக்கு தண்ணீர் தாக்குதல்

கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரையும், இதே விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறை லத்தியால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. ​

Samayam Tamil 26 Aug 2020, 2:36 pm
கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராடும் நோக்கத்தில் பேரணியாக சென்ற பாஜக யு மோர்ச்சா அமைப்பினர் மீது காவல்துறையினர் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.
Samayam Tamil bjp water canoned


கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷிடம் இருந்து செல்ஃபோன்கள் மற்றும் லேப் -டாப்களை என்ஐஏ அதிகாரிகள் ஏற்கெனவே பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். தோண்டத் தோண்ட வெளிவரும் ஆச்சரியங்களுடன் பயணிக்கிறது இந்த வழக்கின் விசாரணை. இந்த வழக்கில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் வரையிலும் தொடர்பு படுத்தி பேச்சுகள் எழுந்துள்ளன. .

இந்நிலையில், கேரள தலைமைச்செயலகத்தில் திடீரென்று நேற்று தீப்பிடித்தது. இதனயடுத்து, ஆதாரங்களை அழிக்கும் திட்டமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கேரள பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா பிரிவினர் இதனை இதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கேரள தங்கக் கடத்தலில் ஒளிந்திருக்கும் மர்மம்; என்.ஐ.ஏ அறிக்கையில் அம்பலம்!

போராட்டக்காரர்கள் நடந்து சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், தகவலறிந்த காவலர்கள் வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனையும் மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த போது காவலர்கள் தண்ணீர் பீய்ச்சும் பீரங்கிகளைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது தண்னீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்.


முன்னதாக, கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினரையும், இதே விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறை லத்தியால் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி