ஆப்நகரம்

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த பாதிாியாருக்கு 20 ஆண்டு சிறை

கேரளா மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிாியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 5:11 pm
கேரளா மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிாியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Father Robin VAdakkanchery


கேரளா மாநிலம் கண்ணூா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிாியாராக இருந்தவா் ராபின் வடக்கன்சேரி. இவா் அங்கிருந்த பள்ளியில் மேலாளராகவும் பொறுப்பு வகித்தாா். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த 16 வயது மாணவியை பாதிாியாா் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு கடந்த 2017ம் ஆண்டு குழந்தையும் பிறந்தது. இதனைத் தொடா்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினா் நடத்திய தீவிர விசாரணையில் பாதிரியாா் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.


இந்த வழக்கை தலசேரி போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் கடந்த டிசம்பா் மாதம் வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பாதிாியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டப்பட்டது.

அபராதத் தொகையில் ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டாா்.

அடுத்த செய்தி