ஆப்நகரம்

கேரள மாணவி ராகிங் விவகாரம் - இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு

கர்நாடகாவில் நர்சிங் பயின்ற மாணவியை ராகிங் செய்த வழக்கில், சீனியர் மாணவிகள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TNN 23 Jun 2016, 1:28 pm
கோழிக்கோடு: கர்நாடகாவில் நர்சிங் பயின்ற மாணவியை ராகிங் செய்த வழக்கில், சீனியர் மாணவிகள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil kerala ragging issue case filled against two seniors
கேரள மாணவி ராகிங் விவகாரம் - இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு


கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வதி, கர்நாடகாவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி, சீனியர் மாணவிகள் இரண்டு பேர் அஸ்வதியை ராகிங் செய்துள்ளனர்.

அப்போது கழிவறைக்கு பயன்படுத்தும் பினாயிலை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் மாணவி அஸ்வதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அஸ்வதியை ராகிங் செய்த சீனியர் மாணவிகள் அதிரா மற்றும் லட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி